விபத்தில் சிக்கியவர்களின் உயிர்களை காப்பாற்றுவேத தனது லட்சியம் என நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் பிரபஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 20 லட்சத்து 87 ஆயிரம் மாணவர்களும், தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரம் மாணவர்களும் நீட் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 78 ஆயிரத்து 693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்
இதில் சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் படித்த மாணவர் பிரபஞ்சன் 720/720 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பின்னர் வசந்த் தொலைக்காட்சிக்கு மாணவர் பிரபஞ்சன் அளித்த பேட்டியில், நீட் தேர்வில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை, அதற்கு கடவுள், ஆசிரியர், பெற்றோர்தான் காரணம் என தெரிவித்தார்.
மேலும் மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை நிபுணராகி, விபத்தில் சிக்கியவர்களின் உயிர்களை காப்பாற்றுவதே தனது லட்சியம் என தெரிவித்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…