விபத்தில் சிக்கியவர்களின் உயிர்களை காப்பாற்றுவேத தனது லட்சியம் என நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் பிரபஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 20 லட்சத்து 87 ஆயிரம் மாணவர்களும், தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரம் மாணவர்களும் நீட் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 78 ஆயிரத்து 693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்
இதில் சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் படித்த மாணவர் பிரபஞ்சன் 720/720 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பின்னர் வசந்த் தொலைக்காட்சிக்கு மாணவர் பிரபஞ்சன் அளித்த பேட்டியில், நீட் தேர்வில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை, அதற்கு கடவுள், ஆசிரியர், பெற்றோர்தான் காரணம் என தெரிவித்தார்.
மேலும் மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை நிபுணராகி, விபத்தில் சிக்கியவர்களின் உயிர்களை காப்பாற்றுவதே தனது லட்சியம் என தெரிவித்தார்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…