தமிழகத்தில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அழுதுகொண்டே வந்த குழந்தைகளுக்கு சாக்லேட் தந்து ஆசிரியைகள் சமாதானப்படுத்தினர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந் நிலையில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வழக்கம்போல் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். ஆனால் எல்கேஜி வகுப்பில் சேர்க்கப்பட்டு முதல் முதலாக பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இத்தனை நாள் தாய், தந்தையின் அரவணைப்பில் மட்டுமே இருந்து வந்த குழந்தைகளுக்கு பள்ளி, ஆசிரியர், வகுப்பு என புதிய உலகத்திற்குள் நுழைய தயக்கம் ஏற்பட்டது.
“கொஞ்சம் அழுதுதான் பார்ப்போம் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவார்கள்” என்ற நம்பிக்கையில் சில குழந்தைகள் ஓவென அழுதுகொண்டே பள்ளிக்கு வந்தனர். ஆனால் பெற்றோர் எந்த கரிசனமும் காட்டாமல் அவர்களை பள்ளிக்குள் கணத்த இதயத்துடன் விட்டுச் சென்றனர். அழுது கொண்டு வந்த குழந்தைகளுக்கு சாக்லேட் மற்றும் ரோஜாப்பூ கொடுத்து ஆசிரியைகள் சமாதானப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…