பழனி வனப்பகுதியில் வாழும் பறவைகளை பிடித்து வைத்திருந்த, தம்பதிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலை அருகே ஏராளமான வனவிலங்குகளும், பறவைகளும் வசித்து வருகின்றன. அவற்றுள், அரிய வகை பறவையான பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது.
இந்நிலையில், வனத்துறையினரால், மாரிமுத்து என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, 40 கிளிகள் மற்றும் 70 முனியாஸ் பறவைகள் கூண்டில் அடைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவைகள் கூண்டுகளுடன் சேர்த்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து, வனத்துறையினர், மாரிமுத்து மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஆகியோருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அப்பகுதி மக்கள், அவர்கள் வீட்டில் வளர்க்கும் கிளிகளை தங்கள் அலுவலகத்தில் வந்து ஒப்படைத்து செல்லவேண்டும் என்று எச்சரித்து சென்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…