பழனி வனப்பகுதியில் வாழும் பறவைகளை பிடித்து வைத்திருந்த, தம்பதிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலை அருகே ஏராளமான வனவிலங்குகளும், பறவைகளும் வசித்து வருகின்றன. அவற்றுள், அரிய வகை பறவையான பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது.
இந்நிலையில், வனத்துறையினரால், மாரிமுத்து என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, 40 கிளிகள் மற்றும் 70 முனியாஸ் பறவைகள் கூண்டில் அடைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவைகள் கூண்டுகளுடன் சேர்த்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து, வனத்துறையினர், மாரிமுத்து மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஆகியோருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அப்பகுதி மக்கள், அவர்கள் வீட்டில் வளர்க்கும் கிளிகளை தங்கள் அலுவலகத்தில் வந்து ஒப்படைத்து செல்லவேண்டும் என்று எச்சரித்து சென்றனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…