கம்பத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த யானை காட்டுக்குள் விடப்பட்டுள்ள நிலையில், அரிசி கொம்பன் யானை புல்லை கழுவி உண்ணும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் மக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் காட்டு யானை இரண்டு நாட்களுக்கு முன்பு கோதையார் அணையில் இருந்து சுமார் நான்கு கிமீ தொலைவில் முத்துக்குழி வயல் பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
இந் நிலையில் அரிசிக் கொம்பன் யானை நேற்று கோதை ஆறு அணைக்கு வந்தது. அங்கு அணையில் கரையோரம் நின்று தண்ணீர் அருந்திய காட்சிகள் வெளியாகின. மேலும் அணையை சுற்றி வலம் வந்தது இந்த நிலையில் தற்போது யானை குட்டியாறு அணைக்கு வந்த வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் அரிசி கொம்பன் யானை கரையில் உள்ள புற்களை தும்பிக்கையால் புடுங்கி தண்ணீரில் கழுவி அழகாக சாப்பிடுகிறது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அரிசி கொம்பன் வனத்தை விட்டு வெளியில் வராமல் தனக்கான உணவுகளை அங்கேயே தேடிக் கொள்வது வனத்துறையினரை நிம்மதியடைய செய்துள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…