பக்கவாதத்தால் மன உளைச்சல்! தற்கொலை!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (27). இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகன் கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வேல்முருகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...