காதல் திருமணம் செய்த பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை !

மதுரை செப்டம்பர் 11.நாகமலைபுதுக்கோட்டையில் காதல் திருமணம் செய்து கொண்ட பிளஸ் டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில் பாப்பாக்குடி பொதும்பு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அங்காள ஈஸ்வரி 19. இவர் பிளஸ் டூ படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை மாயமாகிவிட்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய பெற்றோர் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் இவர் மாயமானதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

- Advertisement - WhatsApp

அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர் நாகபாண்டி என்பவருடன் திண்டுக்கல்லில் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் அவரை ஆலம்பட்டியில் உள்ள அத்தை கணேசன் மனைவி நாகலட்சுமி வீட்டில் விட்டுவிட்டு நாக பாண்டி சென்றுள்ளார். இந்த நிலையில் அவரை அழைத்துச் செல்ல நாக பாண்டி வரவில்லை என்று மன உளைச்சலில் இருந்த மாணவி அங்காள ஈஸ்வரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அத்தை நாகலட்சுமி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி அங்காள ஈஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...