இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அன்று பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவராக கருதப்படும் சர் மோஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளை இந்த நாள் நினைவுகூறுகிறது..
உலகின் பொறியாளர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளுடன் இணைந்து இத்தினத்தை கொண்டாடுகின்றனர்.
நாட்டின் அனைத்து பொறியாளர்களுக்கும் குறிப்பாக சிவில் இன்ஜினியர்களுக்கும், சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்களின் இலக்குகளை நிறைவேற்றுவதிலும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதிலும் தங்களின் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவு படுத்தும் தினமாக கொண்டாடப்படுகிறது.
1968 ஆம் ஆண்டில் இந்திய அரசு செப்டம்பர் 15 ஆம் தேதியை தேசிய பொறியாளர்கள் தினமாகக் கடைபிடிக்க முடிவு செய்தனர்.
