பேருந்துகள் நின்று செல்ல மாணவிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பேருந்து நிறுத்தத்தில் முறையாக பேருந்துகள் நின்று செல்லாததால் அவதிப்படுவதாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு அரசு தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தனித்தனியாக உள்ளது. மேலும் அருகில் உள்ள சோழவந்தான், குருவித்துறை போன்ற பகுதிகளிலும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இங்கிருந்து மதுரை மற்றும் வெளியிடங்களுக்கு பணி நிமித்தமாக ஏராளமானோர் அரசு பேருந்தை நம்பியே உள்ளார்கள்.

- Advertisement - WhatsApp

இந்நிலையில், மதுரை மற்றும் சோழவந்தான் அரசு போக்குவரத்து பனிமனையிலிருந்து முள்ளிபள்ளத்தை அடுத்த குருவித்துறை, மன்னாடிமங்கலம், விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன. இந்தப் பேருந்துகள் முள்ளிப்பள்ளத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர் கல்லூரிகளுக்கு செல்பவர்கள் வர்த்தகம் மற்றும் பணி நிமித்தமாக செல்லும் பொதுமக்கள் ஆகியோர் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும் நெரிசலை தவிர்க்க கூடுதல் பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதன் முலம் மாணவர்கள் படியில் தொங்கி செல்வதை தவிர்க்கலாம் என்றும் மாணவர்களை உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களில் இருந்து காப்பாற்றலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...