சதுரகிரிமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்….

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாளில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று காலை 6.30 மணியிலிருந்து பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது. இன்று காலையும் ஏராளமான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். நாளை ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு காலை 6 மணியில் இருந்தே, பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணி முதல், மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், அதிகாலையிலேயே வனத்துறை முகப்பு வாயிலில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். ஞாயிறு கிழமையன்று விடுமுறை நாளாக இருப்பதால், அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...