ALL NEWS

லாரி மோதி நரிக்குறவர் இன கர்ப்பிணி பலி

by udhayatoday  •  June 10, 2023

திருவள்ளூர் , மீஞ்சூர் அருகே குண்டும் குழியுமாக மாறிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நரிக்குறவர் இன கர்ப்பிணிப் பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -Advertisement

மீஞ்சூர் முதல் திருவொற்றியூர் வரை உள்ள நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி அப்பகுதிகளில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

- Advertisement -Advertisement

இந்நிலையில் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியை சேர்ந்த அஜித் என்ற நரிக்குறவர் இனத்தை சேர்ந்த வாலிபர் தனது கர்ப்பிணி மனைவி ஐஸ்வர்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

- Advertisement -Advertisement

அப்போது பட்டமந்திரி அருகே சென்று கொண்டிருந்த இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது லாரி ஒன்று பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஐஸ்வர்யா, கணவன் கண் முன்பாக உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

- Advertisement -Advertisement

மேலும் அஜித்தின் 2 கால்களும் உடைந்த நிலையில் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

- Advertisement -Advertisement
DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.

- Advertisement -Advertisement