ஆரணியில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

பழங்குடியின சமுதாய மக்கள் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆரணி நகரில் 1,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பழங்குடியினத்திற்கான சாதிச் சான்றிதழ் கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

- Advertisement - WhatsApp

வனப்பகுதியில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்பு மற்றும் பயிர் இழப்பிற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

 மேலும் சொந்த வீடு இல்லாத பழங்குடி இன மக்களுக்கு அரசு வீடு கட்டி தர வேண்டும் என்றும், தச்சூர் கிராமத்தில் பழங்குடியின, இருளர் இன மக்களுக்கு அரசு வழங்கிய தொகுப்பு விடுகளை விரைந்து முடித்து தரவேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

 ஆரணி கோட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடியின மக்களுக்கும் நிலுவையில் உள்ள இனச் சான்று, குடியிருப்பு பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணி கோட்டை மைதானத்தின் வழியாக ஊர்வலமாக சென்ற மலைவாழ் மக்கள் அவர்களுக்கே உரிய மேளங்களை அடித்து நடனமாடி ஊர்வலமாக வந்து ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...