Uncategorized

பள்ளிகளில் கட்டாயம் மாலைநேர வகுப்புகள்

by udhayatoday  •  June 27, 2023

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 12 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டயாம் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், மாலை 5 மணி வரையோ அல்லது 5.30 மணி வரையோ இந்த மாலை நேர வகுப்புகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

- Advertisement -Advertise