பஸ்ல 3 மடங்கு காசு கேக்குறாங்க ! புலம்பிய திருப்பூர் மக்கள் !

திருப்பூரில் இருந்து மதுரைக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் வெளியூர் செல்ல இரவு 8 மணியில் இருந்தே பேருந்துகள் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்த பயணிகள் அரசுப் போக்குவரத்து அலுவலர்களை அணுகியுள்ளனர். ஆனால் அவர்கள் முறையால் பதில்தரவில்லை எனக்கூறி பயணிகள் தாராபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

- Advertisement - WhatsApp

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சமரசப் பேச்சில் ஈடுபட்டதோடு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். எனினும் இரவு 12 மணிவரை பேருந்துக்காக பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், அரசுப்

பேருந்துகள் இயக்கப்படாதால் தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் அதிகம் கேட்பதாக வேதனை தெரிவித்தார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...