தடகள வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

தென்கொரியாவில் நடைபெற்ற “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் -2023” போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த தடகள வீரர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தென்கொரியாவில் 2023 ஜுன் 4 முதல் 7 வரை 20 வயதுக்கு உட்பட்டோருக்கான “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் – 2023” போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் இந்திய தடகள வீரர்கள் 19 பதக்கங்கள் வென்றனர்.

- Advertisement - WhatsApp

இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சார்ந்த 4 தடகள வீரர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். 4 × 400 மீ தொடர் ஓட்டத்தில் எம்.கனிஸ்டா டீனா (பெண்கள் பிரிவு) தங்கப்பதக்கமும், எம். சரண் மேகவர்ணம் (ஆண்கள் பிரிவு) வெள்ளிப் பதக்கமும், 4×100மீ தொடர் ஓட்டத்தில் (பெண்கள் பிரிவு) ஆர். அபிநயா மற்றும் எஸ். அக்சயா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 4 தடகள வீரர்களும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை (10.06.2023) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

- Advertisement - WhatsApp

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா மற்றும் பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...