Tag: twowheeler

  • லாரி மோதி நரிக்குறவர் இன கர்ப்பிணி பலி

    லாரி மோதி நரிக்குறவர் இன கர்ப்பிணி பலி

    திருவள்ளூர் , மீஞ்சூர் அருகே குண்டும் குழியுமாக மாறிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நரிக்குறவர் இன கர்ப்பிணிப் பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மீஞ்சூர் முதல் திருவொற்றியூர் வரை உள்ள நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி அப்பகுதிகளில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியை சேர்ந்த அஜித் என்ற நரிக்குறவர் இனத்தை சேர்ந்த வாலிபர் தனது கர்ப்பிணி மனைவி ஐஸ்வர்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பட்டமந்திரி அருகே சென்று கொண்டிருந்த இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது லாரி ஒன்று பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஐஸ்வர்யா, கணவன் கண் முன்பாக உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் அஜித்தின் 2 கால்களும் உடைந்த நிலையில் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  • சாலை விதிமீறல்; குடும்பமே உயிரிழந்த சோகம்

    சாலை விதிமீறல்; குடும்பமே உயிரிழந்த சோகம்

    குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குமரி மாவட்டம் கூட்டப்புளி பகுதியை சேர்ந்த அருள்ராஜ்-சுபிஜா தம்பதிக்கு 3 வயதில் அஸ்வந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. உறவினர் வீட்டுக்கு அருள்ராஜ், மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது குழித்துறை கல்லுகட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்து அருள்ராஜின் மோட்டார் சைக்கிளில் பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த அருள்ராஜ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.