Tag: ragulgandhi

  • கடந்த ஆட்சியை காங்கிரஸ் குறைசொன்னதில்லை

    கடந்த ஆட்சியை காங்கிரஸ் குறைசொன்னதில்லை

    ஒடிசா ரயில் விபத்துகள் போன்று அசம்பாவிதம் நடக்கும்போது முந்தை ஆட்சியை காங்கிரஸ் குறை சொன்னதில்லை என்றும், மாறாக அதற்கு பொறுப்பேறு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்றும் இளம் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார். நியூயார்க் ஸ்டான்ட் போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி இதனை தெரிவித்தார்.

    மேலும் ரயில் விபத்திற்கு முந்தைய காங்கிரஸ் காட்சி மேல் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய பிரதமர் மோடி உத்தரவிடவேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள இளம் தலைவர் ராகுல்காந்தி, ரயில் விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற வலி நிறைந்த விபத்துக்களுக்கு பொறுப்பேற்பதிலிருந்து மோடி அரசு விலகிவிட முடியாது என்றும் இளம் தலைவர் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சி செய்தபோது ஏற்பட்ட ரயில் விபத்துகளுக்கு முந்தைய பிரிட்டிஷ் காலத்தில் அமைத்த தண்டவாளங்கள்தான் காரணம் என குறை கூறவில்லை, விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர்கள் பதவி விலகி உள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.

  • கோவையில் நடைபெற்ற ரயில் நிலைய முற்றுகை

    கோவையில் நடைபெற்ற ரயில் நிலைய முற்றுகை

    பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    மல்யுத்த பயிற்சி சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பி யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள் பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் போட முன்வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பதக்கங்கள் வீசும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு அளித்தும், பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தியும SFI, DYFI, உள்ளிட்ட அமைப்புகள் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.

    இதில் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.