Tag: mallikarjunkharge

  • கட்சிகளை பிளவுபடுத்த நேரம் உள்ளது – கார்கே

    கட்சிகளை பிளவுபடுத்த நேரம் உள்ளது – கார்கே

    அரசியல் கட்சிகளுக்கு இடையே பிளவுபடுத்த பிரதமர் மோடிக்கு போதுமான நேரம் உள்ளது. ஆனால் ஆயுதப்படைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரமில்லையா என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

    நாள் தோறும் தேசியம் பற்றி பேசுபவர்கள் நமது ஆயுதப்படைகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.

    ஆயுதப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, அக்னிபாத் திட்டம் என்பது நமது ராணுவ வீரர்களுக்கு வழங்க மோடி அரசிடம் போதுமான நிதி இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது என கூறியுள்ளார்.

    ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்தலில் பாதுகாப்பு சமூகத்திற்கு மோடி அரசு துரோகம் இழைத்துள்ளதாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் 2-ல் பெரிய அளவிலான முரண்பாடுகளைத் தூண்டுவதன் மூலம், நமது ராணுவத்தினரிடையே பிளவை உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

  • மணிப்பூர் முதல்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-கார்கே

    மணிப்பூர் முதல்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-கார்கே

    மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், உடனிடாயக மாநில முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, காங்கிரÞ தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.

    கடந்த 55 நாட்களாக மணிப்பூர் குறித்து மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் இறுதியாக உள்துறை அமைச்சர் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடியுடன் பேசி இருப்பதாக தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் மாநிலம் குறித்த பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியைக் கேட்க நாடே காத்திருப்பதாக தெரிவித்தார்.

    அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கி பொதுவான அரசியல் பாதையைக் கண்டறிய வேண்டும் என கேட்டுக் கொண்ட மல்லிகார்ஜுன கார்கே, பாஜக மற்றும் மோடி அரசும் எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும், மணிப்பூர் வன்முறையில் தங்களின் மோசமான தோல்விகளை மறைக்க முடியாது என தெரிவித்தார்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், மறுவாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கான தொகுப்பு தாமதமின்றி தயாரிக்கப்பட வேண்டும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டார்.