விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.
பிறந்த நாளுக்காக சக மாணவன் கொடுத்த சாக்லேட் சாப்பிட 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளியிலேயே அரசு மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் 7 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சாக்லேட் வாங்கிய கடையில் மீதமுள்ள சாக்லேட்டை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

