உ.பி.யின் நேதாஜி முலாயம் சிங் யாதவ் காலமானார்

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குருகிராம் பகுதியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

10 முறை எம்எல்ஏவாகவும் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ். 1989 முதல் 1991 வரையிலும், 1993 முதல் 1995 வரையிலும், 2003 முதல் 2007ம்ஆண்டு வரையிலும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ். முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்து வந்தவர். 1992ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் தொடங்கியு சமாஜ்வாதி கட்சி பிரதான கட்சிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. முலயா சிங் யாதவ்வின் மகன் அகிலேஷ் யாதவும் உத்தர பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய அரசியலிலும் முலாயம் சிங் யாதவ் முக்கியத்துவம் பெற்றிருந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேதாஜி என்று உ.பி. மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ் நெருக்கடி காலங்களில் 19 மாதங்கள் சிறையில் இருந்தார். அவரது 2வது மனைவி சாதனா குப்தா கடந்த ஜூலை மாதம் காலமானார்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

சிஏஜி விவகாரம்… அரசு மீது சந்தேகம்: டெல்லி அரசை கண்டித்த ஐகோர்ட்

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிஏஜியின் அறிக்கைக்கு தாமதமாக பதில் தந்ததற்காக ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி ஐகோர்ட் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி...