வனப்பறவைகளை சிறைபிடித்த தம்பதி

பழனி வனப்பகுதியில் வாழும் பறவைகளை பிடித்து வைத்திருந்த, தம்பதிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலை அருகே ஏராளமான வனவிலங்குகளும், பறவைகளும் வசித்து வருகின்றன. அவற்றுள், அரிய வகை பறவையான பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது.

- Advertisement - WhatsApp

இந்நிலையில், வனத்துறையினரால், மாரிமுத்து என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, 40 கிளிகள் மற்றும் 70 முனியாஸ் பறவைகள் கூண்டில் அடைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவைகள் கூண்டுகளுடன் சேர்த்து பறிமுதல் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து, வனத்துறையினர், மாரிமுத்து மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஆகியோருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அப்பகுதி மக்கள், அவர்கள் வீட்டில் வளர்க்கும் கிளிகளை தங்கள் அலுவலகத்தில் வந்து ஒப்படைத்து செல்லவேண்டும் என்று எச்சரித்து சென்றனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...