தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் இன்று (06.06.2023) சைதாப்பேட்டை , கிழக்கு ஜோன்ஸ் ரோடு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த Tata Ace லோடு வாகனத்தை சோதனை செய்த போது, வாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் குட்கா புகையிலைப்பொருட்களை லோடு வாகனத்தில் கடத்தி வந்த அப்துல்ரகுமான் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல், எம்.டி.எம் உட்பட 406 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 Tata Ace லோடு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.