விபத்தில் காதலி பலி, பயத்தில் காதலன் எஸ்கேப்

அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் 20 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் நேற்று முன்தினம் 20 வயது இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த உடையார்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

- Advertisement - WhatsApp

இந்நிலையில் இறந்த பெண் பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த அபிநயா என்பது தெரியவந்தது. மேலும் மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்த அபிநயா, தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த 30ம் தேதி இரவு பார்த்திபன், அபிநயாவுடன் இருசக்கர வாகனத்தில் உடையார்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்துள்ளனர்.

இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், அபிநயாவை அங்கேயே விட்டு விட்டு பார்த்திபன் மட்டும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

- Advertisement - WhatsApp

படுகாயமடைந்த அபிநயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காதலியை காப்பாற்றாமல் விட்டுச் சென்ற பார்த்திபனை போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...