திருநங்கைகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக திருநங்கைகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சர்வதேச ரோட்டரி மாவட்டம் 3232 உடன் இணைந்து திருநங்கைகள் மூலம் 06.06.2023 அன்று நகரின் பல்வேறு சந்திப்புகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏற்கனவே பல நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் இருந்தபோதிலும், பாதுகாப்பற்ற சாலை நடைமுறைகளின் விளைவுகளைப் பற்றி மக்கள் மிகவும் உணர் திறன் மற்றும் தீவிரமானவர்களாக மாறவேண்டிய அவசியம் இன்னும் உள்ளது.
சிவப்பு சிக்னலில் நிற்கும் போது வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் உள்ளது.
இந்தநிகழ்வின் போது 6 மாற்றுத்திறனாளிகள் கொண்ட குழுவினர் ஏர் ஹோஸ்டஸ் உடை அணிந்து சீட்பெல்ட் மற்றும் தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை கை சிக்னல்களைப் பயன்படுத்தி, போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் ஒரு நிமிடம் சத்தமாக ஒலி எழுப்பினர். இந்த ஃப்ளாஷ் அண்ணாநகர் வளைவில் இருந்த பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் துணை ஆணையாளர் போக்குவரத்து வடக்கு திரு.சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார்.
சாலைப் பாதுகாப்புக்கான மாவட்டத் தலைவர் Rtn திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களை ஒரு சமூகப்பணியின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் ஒரு தளத்தை உருவாக்கி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
“Born to Win” திருநங்கைகள் குழுவிற்கு, திருநங்கைகள் அதிகாரமளித்தல் மாவட்டத் தலைவர் Rtn.V.ருக்மணி அவர்களால் பிரத்தியேகமாக பயிற்சி அளிக்கப்பட்டது.
அண்ணாநகர் ரவுண்டானா, திருமங்கலம் சந்திப்பு ஈகா சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் நந்தனம் சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த சாலை பாதுகாப்பு பிரச்சாரம் மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரச்சாரத்தின் முடிவில், முதலுதவி பெட்டிகள் அமைப்பாளர்களால் சாலையில் பயணிப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...