தனியார் காப்பகத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

திருப்போரூர் அருகே இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில் அந்த காப்பகம் உரிய அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்துள்ளது.

செங்கல்பட்டுதிருப்போரூர் ஒன்றிய பனங்காட்டுப்பாக்கம் அடுத்த புங்கேரி கிராமத்தில் அன்பகம் என்ற பெயரில் தனியார் காப்பகத்தை வீரமணி என்பவர் கடந்த 1999ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். இங்கு மன வளர்ச்சி குன்றியோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 55 பேர் தங்கியுள்ளனர்.

- Advertisement - WhatsApp

இந்நிலையில் இந்த காப்பகத்தில் வசிக்கும் பெண் ஒருவர் காப்பக நிர்வாகி வீரமணி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் விசாரணை நடத்தியதில் அந்த புகார் உண்மை என்பதால், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று இரவு 12 மணி அளவில் வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் ஆசிரமத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வீரமணி மன வளர்ச்சி குன்றிய பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் காப்பக நிர்வாகி வீரமணியை போலீசார் கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...