காஞ்சிபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா

காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவினை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் எம்எல்ஏ சுந்தர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக மாநில நெடுஞ்சாலை துறை சார்பாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கனவே சாலையோரங்களில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு தற்போது மீண்டும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

- Advertisement - WhatsApp

இதற்கிடையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைகளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான தொடக்க விழா கீழ்க்கதிர்பூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்விமோகன் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அதன்படி புதுப்பாடி – வடஇலுப்பை சாலை வாலாஜாபாத் – சுங்குவார்சத்திரம் சாலை உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...