ஒரே இளைஞரை காதலித்த இரட்டை சகோதரிகள்

திரைப்பட பாணியில் இளைஞர் ஒருவரை இரட்டை சகோதரிகள் காதலித்த நிலையில் 3 பேரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவாலங்காடு ஒன்றியத்தில் நடைபெற்றுள்ளது.

திருவாலங்காடு ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமனுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். 10ம் வகுப்பு படித்து வந்த இரட்டை சகோதரிகள் இருவரும், எதிர் வீட்டை சேர்ந்த உறவுக்கார இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது.

- Advertisement - WhatsApp

ஐடிஐ படித்த இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் குடும்பத்தாருக்கு தெரிந்த நிலையில் இருதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மனமுடைந்த 3 பேரும் கொசஸ்தலையாறு அருகே சென்று கொக்கு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

3 பேரும் மயங்கி விழுந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி வழியாக சென்ற மக்கள், அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் இரட்டை சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மீதி 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...