உயர்ந்தது டோல்கேட் கட்டணம்; விலைவாசி உயர வாய்ப்பு !

செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் விலை வாசி உயர வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் வெளியூர் செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்பட லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்பெறுவதற்காக விரைவுச்சாலைகளை அமைக்கப்பட்டு அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த சாலைகளை பராமரிப்பதற்காக வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement - WhatsApp

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலைகளில் 28 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. அந்த வகையில் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் 15 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 28 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தபட்டுள்ளது.

தபால், கூரியர் சேவை, சரக்கு, காய்கறி, எரிபொருள் என அனைத்துமே தமிழகம் முழுவதும் சாலை வழியே கொண்டு செல்லப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...